பெட்ரோல் - டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 வரை உயர்த்த திட்டம்: வீட்டு காஸ் சிலிண்டர் ரூ.50 வரை அதிகரிக்கலாம்
புதுடில்லி: நாடு முழுதும் பெட்ரோல், டீசல் மற்றும் வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை கணிசமாக உயரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. மேற்காசிய போர் பதற்றத்தால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், அதை ஈடுகட்டும் வகையில் இந்த விலை உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது.
தமிழகம், மேற்குவங்கம், கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும் என்ற பேச்சு வலுவாக எழுந்தது. லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலும், 'ஐந்து மாநில தேர்தலை மனதில் வைத்தே, எரிபொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை' என விமர்சித்திருந்தார். ஆனால், தற்போதைக்கு விலை உயர்வு இருக்காது என மத்திய அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில், இன்று திடீரென வணிக காஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டது. இந்தச் சூழலில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 4 முதல் 5 ரூபாய் வரை உயர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல், சமையல் காஸ் சிலிண்டர் விலை 40 - 50 ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் என தெரியவந்துள்ளது.
இந்த விலை உயர்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், நான்கு ஆண்டுகளுக்கு பின் எரிபொருட்களின் விலை முதல் முறையாக உயரும். மேற்காசியா போர் பதற்றத்தால், சர்வதேச எரிசக்தி சந்தையில் ஏற்பட்டிருக்கும் விளைவுகளை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. விலை உயர்வு தொடர்பாக இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. எனினும், ஒரு வாரத்திற்குள் விலை உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டால், போக்குவரத்துக்கான செலவுகள் அதிகரிக்கும். இதன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்து சாமானிய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
பல ஆண்டுகளாக பெட்ரோல் டீசல் விலை ஏற்றாமல் சமாளித்தனர். எண்ணெய் விலை குறைந்த நேரங்களில் எண்ணெய் நிறுவனங்களுக்கு WINDFALL வரி விதித்து கூடுதல் லாபம் பட்ஜெட்டில் ஜல் ஜீவன், சாகர் மாலா போன்ற பல பெரும் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டது . மாநிலங்களுக்கு கூடுதல் நிதி பிரித்து தரப்பட்டது. ஆனால் கச்சா எண்ணெய் விலை உயர்வு 110 டாலரை எட்டியுள்ளதால் அரசு நிறுவனங்களான IOC, HPCL உள்ளிட்டவற்றுக்கு அன்றாடம் ஆயிரக்கணக்கான கோடி இழப்பு. இப்போது பெட்ரோல் நுகர்வைக் கட்டுப்படுத்த விலையை ஏற்றியாக வேண்டும். இல்லாவிடில் அன்னியச் செலாவணி கரைந்து ரூபாய் பாதிப்புக்குள்ளாகும். இது ஈரான் போர் காரணமாக உலகெங்குமுள்ள கொடும் நிலைமைதான். .
இன்று எண்ணெய் வளமிக்க துபாயில் பெட்ரோல் விலை 5 முதல் 10 சதவீதம் ஏற்றப்பட்டுள்ளது. 95 சதவீதத்துக்கு மேல் இறக்குமதி சார்ந்துள்ள நமது நாடு எம்மாத்திரம்?.
இதுவும் ஒரு தேர்தல் மோசடிதான். போர் பதற்றம் மூன்று மாதங்களாக இருக்கிறது. ஏற்கனவே வீட்டு உபயோக காஸ் சென்ற மாதம் 60 ரூபாய் உயர்த்தப்பட்டது. இப்போது தேர்தல் முடிந்ததும் மீண்டும் விலையேற்றம். போர் பதற்றம் என்று சொல்லி தேர்தலுக்கு முன்னால் விலையை ஏற்றி இருக்கலாமே
ப்ளீஸ்
மத்திய அரசு சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்தால் லாபம் முழுவதும் எனக்கு, சர்வதேச கச்சா எண்ணெய் விலை கூடினால் நஷ்டம் உனக்கு என்ற உன்னதமான கொள்கை கொண்டவர்கள்!
இப்போ உயர்த்தினா எப்போ குறைப்பீங்க? உத்திரவாதம் தறுவீங்களா?மேலும்
-
இங்கிலாந்து டெஸ்ட்: சான்ட்னர் விலகல்
-
ஆசிய ஐஸ் ஹாக்கி: இந்தியா வெற்றி
-
இந்தியாவிடம் வீழ்ந்தது சீனதைபே: தாமஸ் பாட்மின்டன் காலிறுதியில்
-
ராஜஸ்தானில் நகை வியாபாரி தற்கொலை: சென்னை மாநகர போலீசாருக்கு சிக்கல்
-
டென்னிஸ்: அரையிறுதியில் மனாஸ்
-
கால்நடை மருத்துவர்கள் களப்பணிக்கு முன் அனுமதி பெறும் உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை