வல்லுார் அணைக்கட்டில் குளித்த தனியார் நிறுவன ஊழியர் பலி
மீஞ்சூர்: கொசஸ்தலை ஆற்றில் உள்ள வல்லுார் அணைக்கட்டில். நண்பர்களுடன் குளிக்க சென்ற தனியார் நிறுவன ஊழியர், சேற்றில் சிக்கி உயிரிழந்தார்.
சென்னை, பம்மல் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் பிரகாஷ், 31. தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். விடுமுறை நாளான நேற்று, நண்பர்களுடன் மீஞ்சூர் அடுத்த சீமாவரம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் உள்ள வல்லுார் அணைக்கட்டில் குளிக்க சென்றார்.
அப்போது, அரவிந்த் பிரகாஷ், திடீரென தண்ணீரில் மூழ்கி மாயமானார். நண்பர்கள், போலீஸ் அவசர உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டனர். மீஞ்சூர் போலீசார் அங்கு விரைந்தனர். தகவலறிந்த பொன்னேரி தீயணைப்பு நிலைய வீரர்கள், அங்கு சென்று, அரவிந்த பிரகாஷை தேடி வந்தனர்.
ஒரு மணி நேர தேடலுக்கு பின், சேற்றில் சிக்கியிருந்த அரவிந்த் பிரகாஷை சடலமாக மீட்டனர். மீஞ்சூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
திரிணமுல் கட்சிக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு; ஒரு தொகுதியில் தேர்தல் ரத்து
-
சிவகங்கை மாவட்டத்தில் கண்மாய்கள் வறண்டன:கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் தவிப்பு
-
'பேட்மேன்' முருகானந்தம் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை!
-
ஓட்டு எண்ணும் மையத்தின் பிற வழிகள் அடைப்பு
-
வரட்டுபள்ளத்தில் 9.60 மி.மீ., மழை
-
8 தொகுதியில் களத்தில் உள்ள 118 வேட்பாளர்