மீஞ்சூரில் பூட்டை உடைத்து பித்தளை பொருட்கள் திருட்டு

மீஞ்சூர்: வீட்டின் பூட்டை உடைத்து, 'டிவி' மற்றும் பித்தளை பொருட்களை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மீஞ்சூர், அரியன்வாயல் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ், 30. இவர், கடந்த மாதம் 26ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, சென்னைக்கு சென்றார். நேற்று காலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.

விரைந்து வந்த தேவராஜ், உள்ளே சென்று பார்த்த போது, 40 அங்குல 'டிவி' மற்றும் பித்தளை பொருட்கள் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்த புகாரின்படி, மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement