சித்ரா பவுர்ணமி விழா  சத்ய நாராயணா பூஜை

திருப்பூர்: சித்ரா பவுர்ணமியன்று பாண்டுரங்கன் - ருக்மாயி கோவிலில் சத்ய நாராயண பூஜை நடந்தது.

ஸ்ரீசத்ய நாராயண சேவா சங்கம் சார்பில், ராயபுரம் ராஜவிநாயகர் கோவிலில் ஸ்ரீசத்ய நாராயண பூஜை நேற்று நடந்தது. சேவா சங்கத்தன், 39 ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 8:00 மணிக்கு ஆஞ்சநேயர் சிறப்பு அபிேஷகம், காலை, 9:00 மணிக்கு மஹா கணபதி ேஹாமம், நவக்கிரஹ ேஹாமம், சுதர்ஷன ேஹாம பூஜைகள் நடந்தது. காலை, 10:30 மணிக்கு கடவுள் வாழ்த்து, ஸ்ரீசத்ய நாராயண சிறப்பு பூஜை, சிறப்பு அலங்காரம் நடந்தது தொடர்ந்து, மஹா தீபாராதனையும், பிரசாத வினியோகமும் நடந்தது.

Tamil News

* திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டிலுள்ள சபாபதிபுரம் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று, சத்ய நாராயணபூஜை நடந்தது. ஆஞ்சநேயருக்கு மகா அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜைகள் நடந்தன. ஸ்ரீராமர், லட்சுமணர், சீதா பிராட்டியுடன், வீர ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

Advertisement