தேர்தல் விளம்பரங்கள் அனுமதிக்கு 'கட்டிங்' வசூலித்த அதிகாரி!
''ஓ ட்டு எண்ணிக்கை முடிஞ்சதும், பஞ்சாயத்தை வச்சுக்கலாம்னு சொல்லிட்டாவ வே...'' என்றபடியே, நண்பர்கள் நடுவில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''என்ன பிரச்னைங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''கோவை மாவட்டத்துல, எல்லா தொகுதிகள்லயும் தி.மு.க., சார்பில், வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைச்சாங்கல்லா... தொண்டாமுத்துார் தொகுதியில், வாக்காளர்களுக்கு தலா, 1,000 ரூபாய் குடுத்தாவ வே...
''தொண்டாமுத்துார் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில், வாக்காளர்களுக்கு தர வேண்டிய பணத்தில், 36 லட்சம் ரூபாயை தி.மு.க., நிர்வாகிகள் சிலர் சுருட்டிட்டாவ... இது சம்பந்தமா, தி.மு.க., அலுவலகத்தில் கடும் வாக்குவாதம் நடந்திருக்கு வே...
''இது மேலிடத்துக்கு போக, 'தேர்தல் முடிவு வந்ததும் இந்த பிரச்னையை பார்த்துக்கலாம்... இப்போதைக்கு ஆற போடுங்க'ன்னு சொல்லிட்டு... 'ஓட்டு எண்ணிக்கை முடிஞ்சதும், 36 லட்சத்தை அமுக்கியவங்களுக்கு ஆப்பு காத்திருக்கு'ன்னு அந்த கட்சியினர் சொல்லுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''வேட்பாளர் செலவுக்கு பணம் குடுத்த வாக்காளர்கள் கதை தெரியுமா ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''ஆச்சரியமா இருக்கே... சீக்கிரம் சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''தஞ்சாவூர் தொகுதியில், அந்த மாவட்ட த.வெ.க., செயலரான விஜய் சரவணன் போட்டியிட்டார்... மற்ற கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த சூழல்ல, விஜய் சரவணன் தேர்தல் செலவுக்கு, வாக்காளர்கள் பணம் குடுத்திருக்கா ஓய்...
''அதாவது, அவர் ஓட்டு கேட்க போன இடங்கள்ல இருந்த கல்லுாரி மாணவ - மாணவியர், விஜய் ரசிகர்கள் பலரும், கவர்ல, 500 முதல், 2,000 ரூபாய் வரை வச்சு குடுத்திருக்காங்க... இப்படி, தினமும் 10 முதல் 20 பேர் வரை, அவருக்கு பணம் குடுத்திருக்கா... இதை பார்த்து, விஜய் சரவணன் நெகிழ்ந்து போயிட்டார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''தேர்தல்ல பெரிய தொகையை சம்பாதிச்சிட்டாருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''சட்டசபை தேர்தல்ல, தேனி மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பலரும், தங்களுக்கு ஆதரவு கேட்டு, பத்திரிகைகள்ல விளம்பரம் வெளியிட்டாங்க... இந்த விளம்பரங்களை, கலெக்டர் அலுவலகத்தில் இருக்கிற ஊடக சான்றளிப்பு துறையிடம் காட்டி, அனுமதி வாங்கி தான் வெளியிடணும்...
''இப்படி அனுமதி கேட்டப்ப, அங்கிருந்த அதிகாரி ஒருத்தர், ஏதாவது உப்பு சப்பில்லாத காரணத்தை சொல்லி, விளம்பரத்தை வெளியிட முடியாதுங்கிற மாதிரி பேசி, கடைசியா 'கட்டிங்' வாங்கிட்டு அனுமதி தந்திருக்காருங்க...
''ஆண்டிபட்டி அ.தி.மு.க., வேட்பாளருக்கு விளம்பர அனுமதி வாங்க, அவரது ஆதரவாளரான, 'மாஜி' அரசு வக்கீல் ஒருத்தர் போயிருக்காரு... அவரிடம் அதிகாரி, '25,000 ரூபாயை வெட்டுங்க'ன்னு கேட்டிருக் காருங்க...
''அதிர்ச்சியான வக்கீல், 'என்கிட்டயே பணம் கேட்கிறீங்களா'ன்னு குரலை உயர்த்த, அதிகாரியோ, 'அண்ணே, இந்த பணம் எனக்கு மட்டுமில்லை... எனக்கு மேல இருக்கிற அதிகாரிகளுக்கும் பங்கு தரணும்'னு சொல்லி வசூல் பண்ணிட்டாருங்க... இந்த வகையில, சில லட்சம் ரூபாயை அதிகாரி அள்ளிட்டாருங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
''முத்துகுமார் இங்கன உட்காரும்...'' என்றபடி அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
இந்த மாதிரி தேர்தல்களில் புழங்கும் பணம், செய்யவேண்டிய அரசுப்பணியில் என்று எல்லாவிதங்களிலும் lump ஆகப் பணம் பார்க்க இதுதானே சந்தர்ப்பம்? ஆளுக்கு ஆள் காற்றுள்ளபோதே தூற்றிக்கொண்டு விட்டனர்மேலும்
-
திரிணமுல் கட்சிக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு; ஒரு தொகுதியில் தேர்தல் ரத்து
-
சிவகங்கை மாவட்டத்தில் கண்மாய்கள் வறண்டன:கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் தவிப்பு
-
'பேட்மேன்' முருகானந்தம் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை!
-
ஓட்டு எண்ணும் மையத்தின் பிற வழிகள் அடைப்பு
-
வரட்டுபள்ளத்தில் 9.60 மி.மீ., மழை
-
8 தொகுதியில் களத்தில் உள்ள 118 வேட்பாளர்