சிறையில் இருந்தபடி மனைவியுடன் வீடியோ காலில் பேசிய கைதி
பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதி ஒருவர், மனைவிக்கு வீடியோ கால் செய்து பேசியுள்ளார். மனைவி அந்த வீடியோவை, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதால் விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குற்ற வழக்கில் தொடர்பு உடைய அக்பர் என்பவர், போலீசாரால் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் விசாரணை கைதியாக உள்ளார்.
இவர் சிறையில் இருக்கும் போதே, தன் மனைவிக்கு வீடியோ கால் செய்து, நீண்ட நேரம் காதலுடன் பேசியுள்ளார்.
ஏப்ரல், 28ல், அக்பர் சிறையில் இருந்து விடுதலையானார். அப்போது சிறையில் இருந்து, கணவர் தன்னுடன் பேசிய வீடியோவை அவரது மனைவி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
அதன்பிறகே வீடியோ பரவி, விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. சிறையின் பாதுகாப்பு, கட்டுப்பாடுகள் குறித்து கேள்வி எழுந்துள்ளது.
சிறையில் கைதியிடம் மொபைல் போன் எப்படி வந்தது. சிறைக்குள் ஜாமர் இருந்தும், நெட்ஒர்க் கிடைத்தது எப்படி, கைதிகளுக்கு ஸ்மார்ட் போன் கொடுத்தது யார் என, பொது மக்கள் சந்தேகம் கிளப்புகின்றனர்.
சிறை பாதுகாப்பில் குறைபாடு உள்ளதா என கேள்வி எழுந்துள்ளது.
மேலும்
-
குதிரை பேரத்திற்கு வழிவகுத்த கிரிஷ் ஷோடங்கரின் முந்திரிக்கொட்டை பேச்சு
-
காற்றுடன் மழை: மரங்கள் முறிந்தன
-
நத்தம் முத்தாலம்மன் கோயில் திருவிழா
-
தபால் ஓட்டுக்கள் எண்ணும் பெட்டி தயாரிப்பு தீவிரம்
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களை சங்கடங்களுக்கு ஆட்படுத்த கூடாது கலெக்டர் சரவணன் அறிவுரை
-
தேர்தல் வெற்றியை உறுதியாக நம்புவது ஏன்? நண்பர்களிடம் பகிர்ந்த பழனிசாமி