காற்றுடன் மழை: மரங்கள் முறிந்தன
சாணார்பட்டி: சாணார்பட்டி, கோபால்பட்டி சுற்றுப்பகுதிகளில் நேற்று மாலை 5:00 மணிக்கு பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததில் மரங்கள் முறிந்தன.
இதில் சாலையோர வீட்டில் குடியிருந்த தேங்காய் தொழிலாளி சேகர் குடிசை வீட்டின் கூரை காற்றில் பறந்து சென்று அருகில் இருந்த சாலையில் விழுந்தது.
வீட்டில் இருந்த சேகர் உட்பட 6 பேர் உயிர் தப்பினர். சேகரின் தாயார் மருதாயி காயமடைந்தார். விலக்குரோட்டில் சாலையோரம் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன.
மேலும் விலக்கு ரோடு மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள சில வீடுகள் சேதமடைந்தன.மேலும் அய்யாபட்டி மேட்டுப்பட்டி,கன்னியாபுரம், வேம்பார்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் மின்கம்பங்கள், தென்னைமரங்கள் முறிந்து விழுந்தன.
மேட்டுப்பட்டியில் சாலையோர மரம் முறிந்து விழுந்ததில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும்
-
கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி விழா கேரள போலீஸ் கெடுபிடி; பக்தர்கள் அதிருப்தி
-
விஜய் வருகை ரத்து: வேளாங்கண்ணியில் காத்திருந்தோர் ஏமாற்றம்
-
போட்டி தேர்வு, கோடைகால பயிற்சி மையங்களளை தேர்ந்தெடுப்பதில் தேவை உஷார்! விடுமுறை கால வகுப்பு என்ற பெயரில் களமிறங்கும் போலி மையங்கள்
-
ஈரானுக்கு இரண்டு வழி: அதிபர் டிரம்ப் நிபந்தனை
-
திவால் ஆன நிறுவனத்தின் சொத்துக்களை வாங்கும்போது கவனம் தேவை!
-
அறக்கட்டளை நிர்வாகத்திடம் சொத்து வாங்குவோர் கவனிக்க!