பணி நிறைவு பாராட்டு விழா

குளித்தலை: குளித்தலை சப்-கலெக்டர் அலுவலகத்தில், வி.ஏ.ஓ., வாசுகி ஸ்ரீராமனுக்கு நடந்த பணி நிறைவு பாராட்டு விழாவிற்கு, சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ தலைமை வைத்தார். சப் கலெக்டரின் நேர்முக உதவியாளர் மகேந்திரன், தாசில்தார் இந்துமதி, தனி தாசில்தார்கள் நீதிராஜன், ஜெயவேல் காந்தன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசுகி ஸ்ரீராமனுக்கு, சப்-கலெக்டர் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள், உறவினர்கள் பணிநிறைவு பெரும் வி.ஏ.ஓ.,வை பாராட்டி நினைவு பரிசு வழங்கினர்.

தமிழ்நாடு வி.ஏ.ஓ., அலுவலர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு வி.ஏ.ஓ., முன்னேற்ற சங்க பொறுப்பாளர்கள், அரசு அலுவலர்கள்,. ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement