முன்னாள் ராணுவ வீரருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
சென்னிமலை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், புலிவலம் அடுத்த தெக்காட்டூரில் உள்ள இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் கணபதி. இவரது மகன் இந்துகுமார், 37;, தற்போது சென்னிமலை மேலப்பாளையம் பெருமாள் கோயில் வீதியில், இந்துகுமார் வசித்து வருகிறார்.
மேலப்பாளையம் காந்திநகரை சேர்ந்தவர் ராஜபிரகாஷ், 40; முன்னாள் ராணுவ வீரர். குடும்பத்துடன் கோவை மாவட்டம் சூலுாரில் வசித்து வருகிறார். இவர் காரில் சென்னிமலை வந்துள்ளார். இந்துகுமார் வீடு எதிரில் காரை நிறுத்தியுள்ளார். காரை நிறுத்தக்கூடாது என்று தகராறு செய்து ராஜபிரகாஷை தாக்கியுள்ளார். பின்னர் காரை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். புகாரின்படி சென்னிமலை போலீசார் இந்துகுமாரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி விழா கேரள போலீஸ் கெடுபிடி; பக்தர்கள் அதிருப்தி
-
விஜய் வருகை ரத்து: வேளாங்கண்ணியில் காத்திருந்தோர் ஏமாற்றம்
-
போட்டி தேர்வு, கோடைகால பயிற்சி மையங்களளை தேர்ந்தெடுப்பதில் தேவை உஷார்! விடுமுறை கால வகுப்பு என்ற பெயரில் களமிறங்கும் போலி மையங்கள்
-
ஈரானுக்கு இரண்டு வழி: அதிபர் டிரம்ப் நிபந்தனை
-
திவால் ஆன நிறுவனத்தின் சொத்துக்களை வாங்கும்போது கவனம் தேவை!
-
அறக்கட்டளை நிர்வாகத்திடம் சொத்து வாங்குவோர் கவனிக்க!
Advertisement
Advertisement