ஈரானில் கிளஸ்டர் குண்டுகள், கண்ணி வெடிகள் வெடித்து சிதறியது; வீரர்கள் 14 பேர் பலி
டெஹ்ரான்: ஈரானில் கிளஸ்டர் குண்டுகள் மற்றும் வான்வழி கண்ணி வெடிகள் வெடித்ததில் வீரர்கள் 14 பேர் உயிரிழந்தனர்.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்களின் போது வீசப்பட்ட கிளஸ்டர் குண்டுகள் மற்றும் வான்வழி கண்ணி வெடிகள் சில வெடிக்காமல் நிலத்தில் புதைந்து கிடந்தன.
ஈரானின் வடமேற்கு பகுதியில் உள்ள சஞ்சன் மாகாணத்தில், 1,200 ஹெக்டேர் விவசாய நிலங்களில் பரவியிருந்த வெடிக்காத குண்டுகளை அகற்றும் பணியில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு வெடிக்காத வெடிகுண்டு ஒன்றை செயலிழக்கச் செய்யும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். ஆனால் அந்த வெடிகுண்டு திடீரென வெடித்து சிதறியது. இதில், 14 வீரர்கள் உயிரிழந்தனர்; இருவர் படுகாமடைந்தனர்.
உயிரிழந்த வீரர்கள் அனைவரும் மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் சிறப்பு பயிற்சி பெற்ற வெடிகுண்டு நிபுணர்கள் என்று கூறப்படுகிறது.
மேலும்
-
திரிணமுல் கட்சிக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு; ஒரு தொகுதியில் தேர்தல் ரத்து
-
சிவகங்கை மாவட்டத்தில் கண்மாய்கள் வறண்டன:கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் தவிப்பு
-
'பேட்மேன்' முருகானந்தம் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை!
-
ஓட்டு எண்ணும் மையத்தின் பிற வழிகள் அடைப்பு
-
வரட்டுபள்ளத்தில் 9.60 மி.மீ., மழை
-
8 தொகுதியில் களத்தில் உள்ள 118 வேட்பாளர்