மின் டிரான்ஸ்பார்மரில் காப்பர் காயில் திருட்டு

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே அண்ணாமலைஹள்ளி, அந்தேரிகாடு கிராமத்தில், 17-25 கே.வி.ஏ., திறன்கொண்ட டிரான்ஸ்பார்மர் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, டிரான்ஸ்பார்-மரில் மின்சாரத்தை துண்டித்து விட்டு அதிலிருந்த, 28 லிட்டர் ஆயில் மற்றும், 81 கிலோ காப்பர் காயில்கள் திருடப்பட்டுள்ளது.


இது குறித்து, மின்வாரிய உதவி பொறியாளர் மாதேஷ் அளித்த புகார்படி, பாலக்கோடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement