சூசையப்பர் தேர் பவனி

நிலக்கோட்டை:நிலக்கோட்டை சூசையப்பர் சர்ச் திருவிழாவில் சூசையப்பர் உருவம் தாங்கிய தேர் பவனி நடந்தது. பாதிரியார் டேவிட் சகாயராஜ் மந்திரித்து துவக்கி வைத்தார். என்.ஜி.ஓ., காலனியில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சர்ச் வந்தடைந்தது.

சிவகங்கை முன்னாள் ஆயர் சூசை மாணிக்கம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. பாதிரியார்கள் அருள், லாரன்ஸ், பன்னீர் ராசா, ஆரோக்கிய ராசு, பொறுப்பாளர் ஆல்பர்ட், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

Advertisement