தவெகவுக்கு ஆதரவா? நாங்கள் சிந்திக்கவில்லை என்கிறார் திருமா

34


சென்னை: தவெகவுக்கு ஆதரவா? என்ற கேள்விக்கு, ''நாங்கள் இதுவரை எதுவும் சிந்திக்கவில்லை; முடிவு எடுக்கவில்லை '' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் பதில் அளித்தார்.

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில், ''தவெகவுக்கு பெரும்பான்மை இல்லை; விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் முடிவு என்னவாகும்'' என்ற கேள்விக்கு, திருமாவளவன் அளித்த பதில்: இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் நீண்ட காலமாக நாங்கள் மதச்சார்பற்ற அரசியல் களத்தில் இணைந்தே பயணித்து வருகிறோம். எதிர்காலத்திலும் முக்கியமான அரசியல் முடிவுகளை இணைந்தே எடுப்போம்.


இப்பொழுது நீங்கள் எழுப்பிய கேள்வி குறித்து நாங்கள் இதுவரை எதுவும் சிந்திக்கவில்லை; முடிவு எடுக்கவில்லை.தமிழகத்தில் ஜாதி, மத சக்திகளுக்கு இடமில்லை என மக்கள் தீர்ப்பு அளித்திருக்கிறார்கள். நாங்கள் முன்னெடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

அதிமுக-பாஜ கூட்டணியை வீழ்த்துவதையே இலக்காக கொண்டு பிரசாரம் மேற்கொண்டோம். தேர்தலில் தவெகவை எதிர்ப்பின் இலக்காக திமுக கூட்டணியை முன்னிறுத்தவில்லை. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Advertisement