நான்கு வழிச்சாலையில் ஒளிராத விளக்குகள்

உடுமலை: பொள்ளாச்சி – திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரியாததால், கடும் பாதிப்பு ஏற்படுகிறது.

பொள்ளாச்சி – திண்டுக்கல் நான்கு வழிச்சாலை திட்டத்தில்,  உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளில் ஆமை வேகத்தில் பணிகள் நடந்து வருகிறது.

ஆனால்,  இரு ஆண்டுக்கு முன், திண்டுக்கல் முதல் மடத்துக்குளம் வரையிலான ரோட்டில் போக்குவரத்து துவங்கியுள்ள நிலையில், உடுமலை, பகுதிகளில் பணி முடிவடையாத நிலையிலும் வாகன போக்குவரத்து அதிகளவு காணப்படுகிறது.

அதிலும், பாலப்பம்பட்டி சந்திப்பு, தாராபுரம் ரோடு சந்திப்பு, திருப்பூர் ரோடு மற்றும் பெதப்பம்பட்டி ரோடு சந்திப்பு, அந்தியூர் சந்திப்பு பகுதிகளிலும், ரோட்டில் கட்டப்பட்டுள்ள பாலங்கள் மற்றும் அவற்றின் கீழும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில், இந்த ரோட்டில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டும், இரவு நேரங்களில் ஒளிராததால், இருட்டாக காணப்படுகிறது. பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மின் விளக்குகளும் எரியாததால், அதிகளவு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

எனவே, பொள்ளாச்சி – திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், மின் விளக்குகள் எரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement