அரக்கோணம்- செங்கல்பட்டு இரட்டை வழித்தடம் திட்டத்திற்கு ரயில்வே ஒப்புதல்

2

நமது நிருபர்




ரூ.993 கோடி மதிப்பிலான அரக்கோணம் - செங்கல்பட்டு இரட்டை வழித்தடம் திட்டத்துக்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை புறநகர் ரயில் இணைப்புகளை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து உள்ளதாக ரயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

தேவைக்கேற்ப கூடுதல் ரயில்களை இயக்க வசதியாக, செங்கல்பட்டு- அரக்கோணம் ஒரு வழி ரயில் பாதையை 1538 கோடி ரூபாயில் இரட்டை வழிப் பாதையாக மாற்ற தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதன் பிறகு பணிகளை துவக்க நிதி கேட்டு ரயில்வே வாரியத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில் ரூ.993 கோடி மதிப்பிலான அரக்கோணம் - செங்கல்பட்டு இரட்டை வழித்தடம் திட்டத்துக்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. 68 கி.மீ., தூரத்திற்கு இரட்டை வழி பாதை அமைக்கும் திட்டத்திற்கு, சென்னை புறநகர் ரயில் இணைப்புகளை மேம்படுத்தும் வகையில் ஒப்புதல் அளித்து உள்ளதாக ரயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

இந்த இரட்டை ரயில்வே பாதை பயன்பாட்டிற்கு வந்தால் தினமும் 1 ரயில்கள் இயங்கும் இடத்தில் 40 ரயில்கள் வரை விரிவுபடுத்த முடியும். பயணியர் ரயில் மட்டுமின்றி சரக்கு ரயில்களும் கூடுதலாக இயக்க முடியும்; இந்த தடத்தில் ஒற்றைப்பாதை இருப்பதால், எதிரே வரும் ரயிலுக்காக பல மணி நேரம் ரயில்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த பாதை பயன்பாட்டிற்கு வந்த பிறகு நேரம் மிச்சமாகும். இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement