சிக்கன் 65-ல் பீஸ் குறைவு; தட்டி கேட்டவர் மீது தாக்குதல்
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே சிக்கன் 65 -ல் பீஸ் குறைந்ததை கேட்டவரை தாக்கிய ஓட்டல் உரிமையாளர், ஊழியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ராஜாக்கமங்கலம்துறையைச் சேர்ந்தவர் லெக்கின் தாஸ் 27, தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். மே 9ல் தனது 2 நண்பர்களுடன் தர்மபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அங்கு நண்பர்கள் சிக்கன் 65 ஆர்டர் செய்துள்ளனர். ஊழியர் அதை கொண்டு வந்த போது பீஸ் குறைவாக இருந்துள்ளது.
இதுகுறித்து லெக்கின் தாஸ் கேட்டுள்ளார். இதை தொடர்ந்து ஊழியருக்கும் அவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து ஓட்டல் உரிமையாளர் தியாகராஜனுக்கு 65, ஊழியர் தகவல் கொடுத்தார். அவரும் வந்து லெக்கின்தாசிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும் லெக்கின் தாைஸ கல்லால் தாக்கி தலையில் காயம் ஏற்படுத்தினார்.
அவர் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லெக்கின் தாஸ் புகாரின் பேரில் ஓட்டல் உரிமையாளர் தியாகராஜன், ஊழியர் ஐயப்பன் 45, மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும்
-
ரோட்டோரத்தில் தேங்கி நிற்கும் மழை நீர் தொற்றுநோய் பரவும் அபாயம்
-
கோவையில் 4 மதுக்கடைகளுக்கு... வச்சாச்சு சீல்! இன்னும் 65 கடைகள் 'தள்ளாட்டம்'
-
சிறுமியிடம் சீண்டல் முதியவருக்கு 'காப்பு'
-
சுவாமிக்கு அணிவித்த 2 பவுன் தாலி திருட்டு
-
நான்கு வழிச்சாலையில் சரிந்த தடுப்புகள் விபத்து அபாயம்
-
புகார்தாரர் புகார் எஸ்.ஐ., இடமாற்றம்