கோடைக்காலத்தில் தண்ணீர் பிரச்னை வரக்கூடாது: அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு
சென்னை: கோடைக்காலத்தில் தண்ணீர் பிரச்னை வரக்கூடாது என அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் விஜய் தலைமையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்தும், கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் தொடர்பாகவும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறார்.
அப்போது விஜய் கூறியுள்ளதாவது: சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் வழங்கலில் உள்ள இடர்பாடுகளை போர்க்கால அடிப்படையில் களைந்து, லாரிகளின் மூலமாகவும், புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தும், மாற்று ஏற்பாடுகள் செய்தும் சீரான குடிநீர் விநியோகம் செய்திட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து மாவட்ட கலெக்டர்களும் திங்கட்கிழமைதோறும் குடிநீர் விநியோகத்தை ஆய்வு செய்து தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் எதிர்வரும் மழைக்காலத்தினை கருத்தில் கொண்டு, தூர்வாரும் பணிகள் மற்றும் வெள்ளத்தடுப்புப் பணிகளை துரிதப்படுத்தி காலதாமதமின்றி சென்னை மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தொடங்க வேண்டும். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.
உத்தரவு போட்ட முதலமைச்சருக்கோ, அதை நிறைவேற்ற வேண்டிய அதிகாரிகளுக்கோ தண்ணீர் பிரச்னையை எப்படி SOLVE பண்ணுவது என்று சிறிதளவும் ஞானம் இல்லை.
கேஜ்ரிவாலைப்போல் தண்ணீர் SUPPLY செய்ய LORRY களுக்கு CONTRACT கொடுத்து அதில் பெரிய SCAM நடக்கும்.
நிலத்தடி நீருக்கு BORING CONTRACT கொடுத்து அது இன்னொரு SCAM க்கு வழி காட்டும்.
மக்கள் தங்கள் பிரச்னையை தானாகவே SOLVE செய்ய முன்வரவேண்டும்:
1. BORING போட்டு நிலத்தடி நீரை உறிஞ்சும் முயற்சியை கைவிடவேண்டும். இது மிகவும் அபாயகரமானது
2. WATER HARVESTING செய்ய முடிந்தவர்கள் தங்கள் வீட்டிலேயே அந்த SET UP ஐ அமைக்கவேண்டும்
3. மஹாராஷ்டிராவில் தேவேந்திர பாட்னவிஸ் ஐ ஆலோசித்து அவரிடம் பாடம் கற்கவேண்டும்
4. ஒவ்வொரு தமிழனும் குறைந்தது 10 மரங்கள் நட்டு - அது வளர்ந்து பெரிதாகும் வரை பராமரிக்கணும்.
மரங்கள் நிலத்தடி நீரை 10 மடங்குக்கு மேல் பேருக்கும் திறமை உள்ளவை.
கோடைகால தேவைகள்- குடி நீர், தடை இல்லாத மின்சாரம், மழைக்காலம் வருமுன் வடிகால்கள் சுத்தம் செய்வது, நீர் நிலைகள் மற்றும் பாசன கால்வாய்கள் மதகுகள் தூர் வாரும் / சீரமைப்பு, தாழ்வான தரை பாலங்கள் ஆய்வு என பல தேவைகளில் கவனம் தேவை.
அதற்கு தண்ணீர் வேண்டும்
மழை பெய்யணும்னு வேண்டிக்கோ ராசா...
லாரிகள் மூலமும் புதிய ஆழ் துளை கிணறுகள் மூலம் தண்ணீர் பிரச்சனை தீர்க்க வேண்டும் என்று உத்தரவாம் .....சென்னை, திருப்பூர் போன்ற நகரங்களில் அளவுக்கு அதிகமான அளவில் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டுள்ளது. நீர் மட்டம் குறைந்து உப்பு நீர் கலந்து தமிழகம் கடும் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது...வணிக நோக்கில் நிலத்தடி நீரை எடுப்பதை ஒழுங்குபடுத்தவும், வரைமுறைப் படுத்தவும் மாநில அளவில் சட்டத்தை உருவாக்க ஏற்கனவே சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவு ....இது புரியாமல் போர் வெல் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் ..