முட்டாள்கள் மட்டுமே அமெரிக்காவிற்கு எதிராகக் குரல் எழுப்ப முடியும்; டிரம்ப் காட்டம்
வாஷிங்டன்: தோல்வியாளர்கள், நன்றியற்றவர்கள் மற்றும் முட்டாள்கள் மட்டுமே அமெரிக்காவிற்கு எதிராகக் குரல் எழுப்ப முடியும் என அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஈரான் எதிரி நம்மை எதிர்த்து ராணுவ ரீதியாகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகப் போலிச் செய்திகள் கூறப்படுகிறது. அது முற்றிலும் பொய்யானது. இது போன்ற அபத்தமான செய்திகளை பரப்புவதே தேசத்துரோகச் செயல் ஆகும். அவர்கள் எதிரிக்குத் துணை போகிறார்கள். ஈரானுக்கு உதவி செய்கிறார்கள்.
இது ஈரானுக்கு ஒரு வீண் நம்பிக்கையை அளிப்பதைத் தவிர, வேறு எதுவும் கிடையாது. இவர்கள் நம் நாட்டிற்கு எதிராகச் செயல்படும் கோழைத்தனமான அமெரிக்கர்களே ஆவர். ஈரான் கடற்படையில் 159 கப்பல்கள் இருந்தன. அந்தக் கப்பல்கள் ஒவ்வொன்றும் இப்போது கடலின் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. அவர்களிடம் இப்போது கடற்படையே இல்லை.
ஈரானின் விமானப்படை அழிந்துவிட்டது; அனைத்துத் தொழில்நுட்பங்களும் கைவிட்டுப் போய்விட்டன; அவர்களின் தலைவர்கள் இப்போது உயிருடன் இல்லை; மேலும் அந்நாடு ஒரு பெரும் பொருளாதாரப் பேரழிவைச் சந்தித்து வருகிறது. தோல்வியாளர்கள், நன்றியற்றவர்கள் மற்றும் முட்டாள்கள் மட்டுமே அமெரிக்காவிற்கு எதிராகக் குரல் எழுப்ப முடியும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அப்படி என்று ஒரு வாடி கட்டின......கூறுகிறார்.
முட்டாள்கள் எழுப்பிய குரல் டிரம்ப் அவர்களை எப்படி பாதித்திருக்கிறது பாருங்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? அவர்கள் முட்டாள்கள் இல்லை என்று.
சரியாக சொன்னீர் களவாணி அமெரிக்க ஜனாதிபதிகள் வியாபாரிகள் மட்டுமே உலக நாடுகள் மீது யுத்தம் என்ற பெயரில் செல்வதை திருட முடியும்
நல்ல ஒரு மருத்துவரை சென்று சந்திக்கவும்... எதற்கு எடுத்தாலும் முஸ்லீம் வெறுப்பு மட்டுமே? அது எதற்கு கிருத்துவரகள் இந்து பேரை வைத்து இருக்கு, அல்லது எதாவது GMM ABCD என்று.. உண்மை அடையாளம் ஏன் மறைக்க வேண்டும்?
முட்டாள்கள் மட்டுமே ட்ரம்ப் கூட இருக்க முடியும்.
நாங்க இது வரைக்கும் நீங்க மட்டும் தான்னு நெனைச்சோம்... இப்போ உங்க நாடு முழுவதுமே வா?
அமாம், ஒரு முட்டாளுக்கு வேறு யார் குரல் எழுப்ப முடியம் , இதிலென்ன அதிசயம்
ஈரான் உலக மக்கள் செல்வங்களை உலகின் இயற்கை வளங்கள் பயன்படுத்தி சேர்த்து, மேலும் ஆதிக்கம் செலுத்த தேவையில்லாமல் அணு ஆயுதம் தயாரிக்க முற்பட்டது. இஸ்ரேல், ஐரோப்பிய, அமெரிக்கா பகுதிகள் தான் பாதிக்கும். உலகின் இஸ்லாம் நாடு அல்லாத பெரும் பகுதியை டிரம்ப் காப்பாற்றியுள்ளார். நன்றி கெட்ட மேற்கத்திய நாடுகள். இஸ்லாம் ஆட்சியில் பிற மத மக்கள் மீது கூடுதல் வரி. இஸ்லாம் அல்லாத நாடுகள் இசுலாமியர்கள் மீது கூடுதல் வரி வசூல் எங்கும் இல்லை. இஸ்லாம் உலகுடன் ஒட்டி வாழ போதனைகள் மாற்ற வேண்டும். அமெரிக்கர்கள் சிறப்பு வரி செலுத்த ஆர்வம் என்றால்அதிபரை எதிர்த்து ஏமாறலாம்.
.. நல்ல ஒரு மருத்துவரை சென்று சந்திக்கவும்... எதற்கு எடுத்தாலும் முஸ்லீம் வெறுப்பு மட்டுமே? அது எதற்கு கிருத்துவரகள் இந்து பேரை வைத்து இருக்கு, அல்லது எதாவது GMM ABCD என்று.. உண்மை அடையாளம் ஏன் மறைக்க வேண்டும்?..
முட்டாள்கள் மட்டுமே அமெரிக்காவிற்கு அதிபராக இருக்கமுடியும்.
ஈரானின் மீது அமெரிக்கா நடத்தும் போர் தவறு என அமெரிக்காவில் கிட்டத்தட்ட 65 சதவிகிதம் மக்கள் கூறுவதாக கருத்துக்கணிப்பு வெளிவந்ததே அவர்கள் அனைவரும் முட்டாள்களா?