முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி ஜோதிடர் ரதன் பண்டிட் நியமனம் வாபஸ்
சென்னை: முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரதன் பண்டிட் நியமனம் செய்யப்பட்ட உத்தரவை தமிழக அரசு வாபஸ் பெற்றது.
தேர்தலில், 'தமிழக வெற்றிக் கழகம் சாதிக்காது' என பலரும் கூறினர். ஆனால், 'த.வெ.க., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்' என, விஜயின் ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் ஆணித்தரமாக கூறினார். ஓட்டு எண்ணிக்கை தொடங்கும் முன்பே, விஜய் வீட்டிற்கு பூங்கொத்துடன் சென்று வாழ்த்து கூறினார்.
தேசிய அளவிலும், தமிழக அளவிலும் அனைத்து ஊடகங்களிலும் இந்த செய்தி தொடர்ந்து வெளியான வண்ணம் இருந்தது. இன்று சட்டசபையில் பேசிய பிரேமலதா உள்ளிட்ட சிலரும் இந்த நியமனம் பற்றி கேள்வி எழுப்பினர்.
பதில் அளித்துப் பேசிய முதல்வர் விஜய், 'நான் அது பற்றி மீண்டும் யோசனை செய்கிறேன்' என்று கூறியிருந்தார். சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றவுடன் முதல் வேலையாக, அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரதன் பண்டிட் நியமனம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.
யார் இந்த ரிக்கி ரதன் பண்டிட்?
* 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஜோதிடம், எண் கணிதம் ஆகியவற்றில் பெரிய அனுபவம் கொண்டவர். இவர், 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 140 இடங்கள் வரை வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று கணித்தார்.
* பண்டிட் வெற்றிவேல் என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2008ம் ஆண்டு டில்லிக்கு குடிபெயர்ந்த பிறகு, ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் என மாற்றிக் கொண்டார்.
* இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் சில சமயங்களில் ஜோதிடம் பார்த்ததாக சொல்லப்படுகிறது.
இவர் ஜோதிடர் மட்டுமல்ல சபரீசன் போன்றோருக்கு முதலீடு குறித்து ஆலோசனையும் வழங்குவதில் நல்ல ஒரு முகவர் என்றும் சொல்லப்படுகிறதே ஒரு வேளை இவர் மூலம் விஜய் தன ஆட்சிக்கால முதலீடுகளைப் பத்திரமாக வைக்க பதவி வழங்கினாரா
பொறுப்புள்ள அரசு
மக்கள் பணத்தில் அட்டூழியம் செய்வது இதுதான்... தினமலர் சகாக்களுக்கு என்னவோ குஷிதான்... தர்மம், நியாயம் எல்லாம் மேடைப்பேச்சுக்கு மட்டுமே... இங்கே சாதியமும், மூடநம்பிக்கைகளும்தான், பின்னோக்குக் கொள்கைகளும்தான் உலகை ஆள்கின்றன...
நல்ல முடிவு இது தேவையில்லாத அரசியல் பிரச்சனை விஜய் வேண்டுமானால் அவர் தனியாக யாரை வேண்டுமானாலும் அமர்த்திக்கொள்ளடும் அவர்களிடம் அவர் அறிவுரை கேட்கட்டும் ஆனால் அவரை அரசு அதிகாரியாக நியமித்தது தவறுதான் என்று உணர்ந்து விஜய் அதை சரி செய்து விட்டார் அதோடு எதிர் இனி கட்சிகள் அதை பற்றி பேசக்கூடாது முடிந்துபோன விஷயம்
முந்திரிக்கொட்டை மாதிரி யோசிக்காமல் ஒரு முடிவை எடுப்பது. பிறகு அதற்கு எதிர்ப்பு வந்தவுடன் அந்த முடிவை மாற்றுவது. புதியவர் இப்படி செயல்பட்டால், கூடிய சீக்கிரம் பதவி இழக்க நேரும்.
ஜோசியம் பார்கறவருக்கே கட்டம் சரியில்லை..
ஆண்டவனை நம்புங்கள். ஜோசியத்தை நம்ப தேவை இல்லை.
இவரை காலியாகும் தொகுதியில் உறுப்பினர் ஆக்கி, வான சாஸ்திரம், மனையடி சாஸ்திரம், ஜோதிட சாஸ்திரம்... துறையை உருவாக்கி, அதன் அமைச்சர் ஆக்கி விடுங்கள். சிறுத்தை எல்லாம் இனி வன பகுதியில் மட்டும். துணிந்து செய்க. அழிவின் விளிம்பில் உள்ள சாஸ்திரங்கள் உயிர் பெறும்.
இரண்டு ஒயிட் நைட்டி களுக்கு நியமன ஆணை கொடுத்திருந்தால் மதச்சார்பற்ற அரசை திராவிட கும்பல் பாராட்டி தள்ளியிருக்கும்.
So called physics teacher who obstain from teaching started singing in dmk stages and pattimanrams who did not know F=MA was made TN school syllabus chairman, then DK subavee then one vakil kannadasan was made TN human rights Commission leader peter alphonse a staunch Christian was minority commission head nobody objected who were with dmk partnership. Why this hatred when new govt appoint one person which is not public affecting post.