பிரதமரின் கவுரவ நிதியை பெறநில உடைமை பதிவு அவசியம்    

சிவகங்கை: பிரதமரின் கவுரவ நிதியை பெற நில உடைமை பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார். அவர் கூறியதாவது: மாவட்ட அளவில் 4,586 விவசாயிகள் மத்திய அரசின் கவுரவ நிதியை பெற்று வருகின்றனர். இவர்கள் இது வரை நில உடைமைகளை பதிவு செய்யாமல் உள்ளனர்.

உழவர் அடையாள அட்டை மூலம் மானியங்கள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கவுன்சிலிங் முறையில் பெறலாம். ஆன்லைனில் பதிவு செய்யும் வசதியும் உள்ளது. இ- சேவை மையத்தினை தொடர்பு கொள்ளலாம் அல்லது வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். பிரதமரின் கவுரவ நிதி பெறும் விவசாயிகள் நில உடைமைகளை பதிவு செய்து பயன்பெற வேண்டும் என்றார்.

Advertisement