முருங்கை பாலமுருகன் கோவிலில் வைகாசி கிருத்திகை விழா விமரிசை
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அருகே முருங்கை கிராமத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன் கோவிலில், வைகாசி கிருத்திகை விழா நேற்று விமரிசையாக நடந்தது.
அச்சிறுபாக்கம் முருங்கை பாலமுருகன் கோவிலில், வைகாசி கிருத்திகை பால் காவடிப் பெருவிழா நேற்று முன்தினம் பரணி விழா உடன் தொடங்கியது. நேற்று காலை 07:30மணிக்கு மூலவர் அலங்காரம் மற்றும் மாலை 03:00 மணிக்கு காவடி பூஜை நடந்தது.
இதில் விரதம் இருந்து காப்பு அணிந்த பக்தர்கள் பால் காவடி, வேல் காவடி, மயில் காவடி, பால் குடங்கள், புஷ்பரதங்கள் மற்றும் அன்னக்காவடிகள் எடுத்து, மாட வீதிகளில் சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர். பின், மும்மூர்த்திகளுக்கு மகா சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு, மலர்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் எழுந்தருளினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்துள்ளேன்: அதிபர் டிரம்ப்
-
கலிபோர்னியாவில் 3 பேர் சுட்டுக்கொலை; தாக்குதல் நடத்திய இருவர் தற்கொலை
-
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு; ஒரே வாரத்தில் 2வது முறையாக அதிகரிப்பு
-
தொடர்ந்து கடினமாக உழைப்பேன்: ஸ்டாலின் மருமகன் 'திடீர்' அறிக்கை
-
ராகுல் மீது கடும் விமர்சனம்: காங்., - எம்.பி., கண்டனம்
-
கோவில்களில் வசூல் வேட்டை; முதல்வர் விஜய் தடுக்கணும்
Advertisement
Advertisement