பஸ் ஸ்டாண்டில் மயங்கிய விவசாயி பலி

ஆத்துார்: தலைவாசல் அருகே நாவலுாரை சேர்ந்தவர் பரமசிவம், 53. விவ-சாயியான இவர், நேற்று உடல் நிலை சரியில்லாததால், தனியார் மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.


காலை, 11:00 மணிக்கு ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில், பஸ்-சுக்கு காத்திருந்தபோது அவர் மயங்கி விழுந்தார். சில நிமி-டத்தில் உயிரிழந்தார். ஆத்துார் டவுன் போலீசார், பரமசிவம் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து
விசாரிக்கின்றனர்.

Advertisement