இருதரப்பினர் தகராறு: 4 பேர் மீது வழக்கு

ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே முகலுார் கிரா-மத்தை சேர்ந்தவர் முனியப்பன், 27, டிரைவர்; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரவீன்குமார், 25, குடும்பத்தினருக்கும் இடையே, சொத்து பங்கீடு தொடர்பாக தகராறு உள்ளது. நேற்று முன்தினம் மதியம், 1:00 மணிக்கு, தன் சரக்கு வாகனத்தில் புதுப்-பட்டி பிரிவு சாலை அருகே, முனியப்பன் சென்றார். அப்போது, அவரது வாகனத்தை வழிமறித்த பிரவீன்குமார் தரப்பு, முனியப்-பனை தகாத வார்த்தையால் திட்டி, வாகனத்தின் முன்புற கண்ணா-டியை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர்.


முனியப்பன் புகார் படி, பிரவீன்குமார் மற்றும் அவரது தாய் உமா, 47, ஆகிய இருவர் மீதும், ராயக்கோட்டை போலீசார் வழக்-குப்பதிந்தனர். அதேபோல், உமா புகார் படி, முனியப்பன் மற்றும் ராஜா, 30, ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Advertisement