மாநிலங்களுக்கு ரூ.90,000 கோடி கடன்: வட்டியின்றி வழங்குகிறது மத்திய அரசு

14

புதுடில்லி: மத்திய அரசு, 90,000 கோடி ரூபாய் நிதியை மாநிலங்களுக்கு வட்டியில்லா கடனாக வழங்க உள்ளது. இந்நிதி, மாநில மூலதன முதலீட்டுக்கான சிறப்பு உதவி திட்டத்தின்கீழ் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வழங்கப்படும்.


இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: மூலதன செலவு கடன் திட்டத்தின் கீழ், மத்திய அரசு, 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் தொகையை மாநிலங்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. இதில், 45 சதவீத தொகை, முதல் காலாண்டிலேயே விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடிப்படை கட்டமைப்புகளுக்கு ஆதாரமான ரயில்வே, நெடுஞ்சாலைகள், மெட்ரோ ரயில், குடிநீர் வழங்கல் மற்றும் மின் திட்டங்களை செயல்படுத்த இவை பயன்படுத்தப்படும்.

மேற்காசிய போர்ச்சூழலில், உள்நாட்டில் நீடித்த பொருளாதார இயக்கத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இது மேற்கொள்ளப்பட உள்ளது. கொரோனா காலத்தில் 'மாநில மூலதன முதலீட்டுக்கான சிறப்பு உதவி திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது. பின் அது விரிவுபடுத்தப்பட்டது. கடந்த 2020 - 21ல் 12,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

அரசு திட்டங்களுக்கான முதலீட்டை அதிகரிப்பது, சீர்திருத்தங்கள் ஆகியவற்றை ஊக்கப்படுத்தும் வகையில் 2024 - 25, 2025 - 26 நிதியாண்டுகளில் 1.50 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இத்திட்டத்தின் வரம்பு அதிகரிக்கப்பட்டது.

இதன் எதிரொலியாக, 2025 - 26 ஒதுக்கீட்டில் நாடு முழுதும் 9,000க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு இத்திட்டத்தின் நிதியை மாநிலங்கள் முழுமையாக பயன்படுத்தி ன. தற்போது அடுத்த கட்ட நிதி வழங்கப்பட உள்ளது. இதன் பெரும்பகுதி, அதாவது 66 சதவீதம் கட்டுப்பாடற்ற செலவின ஒதுக்கீடாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

@block_B@ நிதி நிலவரம்:

* 2025 - 26ன் ஏப்.,- - ஆக., காலகட்டத்தில் மாநிலங்களுக்கு ரூ.40,000 கோடி கடன் வழங்கப்பட்டது

* நடப்பு நிதியாண்டில் மத்திய அரசால் ஏற்கனவே கிட்டத்தட்ட 20,000 கோடி ரூபாய் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது

* ஜூன் இறுதிக்குள் மேலும் 70,000 கோடி ரூபாய் விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.block_B

Advertisement