வருவாய் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தர்மபுரி: தர்மபுரி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடப்பது குறித்து, தர்மபுரி ஆர்.டி.ஓ., காயத்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:


தர்மபுரி மாவட்டம் மற்றும் தர்மபுரி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட வட்டங்களை சேர்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்-பதற்கான குறைதீர் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடத்த, மாவட்ட கலெக்டர் சதீஸ் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, மே மாதத்திற்கான கூட்டம் வரும், 19ம் தேதி செவ்வாய் கிழமை காலை, 11:00 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடக்கவுள்-ளது. இதில், சம்மந்தப்பட்ட அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் பகுதி பிரச்னைகள் குறித்து எடுத்து கூறி பயனடையலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement