திருத்தணியில் பைக் திருட்டு

திருத்தணி: திருத்தணி அடுத்த செருக்கனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 51. இவர், நேற்று காலை 'ஸ்பிளண்டர் பிளஸ்' இருசக்கர வாகனத்தில் வயலுக்கு சென்றார்.

அங்கு, வாகனத்தை நிறுத்திவிட்டு, தண்ணீர் பாய்ச்சினார். பின், மதியம் இருசக்கர வாகனத்தை எடுக்க வந்த போது மாயமானது தெரியவந்தது. திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement