திருச்சுழி அரசு மருத்துவமனை அருகில் மரண குழியால் அபாயம்
திருச்சுழி: திருச்சுழி அரசு மருத்துவமனை அருகில் உள்ள பாலம் பெயர்ந்து குழிகள் போல் உள்ளதால் அவசரத்திற்கு வாகனங்கள் வந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது.
திருச்சுழியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சுற்றிப் பகுதியில் உள்ள கிராம மக்கள் சிகிச்சை பெற வருவர். அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவமனையாக உள்ளதுமருத்துவமனைக்குள் நுழைவு பகுதியின் அருகில் பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. பல ஆண்டுகள் ஆன நிலையில் பாலத்தின் மேற்பகுதி சேலம் அடைந்து, உடைந்து 2 குழிகளாக உள்ளன. அவசர சிகிச்சைக்கு ஆட்டோ மற்றும் வாகனங்களில் வரும் நோயாளிகள் பாலத்த அருகே வரும்போது தடுமாறி செல்ல வேண்டியுள்ளது. 108 ஆம்புலன்ஸ் பாலத்தை சிரமப்பட்டு தான் கடக்க வேண்டி உள்ளது. இங்கு சிகிச்சை பெற வரும் மக்கள் இரவு நேரத்தில் குழிக்குள் விழுந்து எழுந்து தான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது.
மாவட்ட நிர்வாகம் திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு சேதம் அடைந்த பாலத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
மேலும்
-
2 நாட்களில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு; வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரிப்பு
-
அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது; அமைச்சர் ஆனந்த் கண்டிப்பான உத்தரவு
-
ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத்தேர்தல்; தவெகவுக்கு ஜாக்பாட்
-
முதல்வர் விஜய் அமைச்சரவை விரிவாக்கம்; விசிக, முஸ்லிம் லீக் அமைச்சர்கள் பதவியேற்பு
-
ஹோண்டுராஸில் இரு இடங்களில் துப்பாக்கிச்சூடு; 6 போலீசார் உள்பட 25 பேர் சுட்டுக்கொலை
-
இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம்; அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் விருது வழங்கி கவுரவிப்பு