மிரட்டும் எதிரிகள் : பெண் அமைச்சர் ஆவேசம்
நமது நிருபர்
'எதிரிகள் என்னை மிரட்டுகின்றனர் அதற்கெல்லாம் நான் பயப்படுகிற ஆள் இல்லை' என அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்தார்.
மிரட்டுவது தனிப்பட்ட நபரா, உட்கட்சியா, எதிர்க்கட்சியா என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறியதாவது: பெயர் சொல்லாமல் மறைமுகமாக மிரட்டுகிறார்கள்.
அதாவது எந்த நூதன முறையில் மிரட்டுகிறார்கள் என்றால் என் தொகுதியில், இந்த பிரச்னை, என் வார்டில் இந்த பிரச்னை என்று பொய்யான தகவல் சொல்கின்றனர். பொய்யான பெயர் சொல்லி பேசுகின்றனர். விசாரிக்கும் போது அதில் எந்த உண்மை தன்மை எதுமே இல்லை.
10 நிமிடங்களுக்கு ஒரு முறை போன் செய்து எனது பிஏவை மிரட்டுகின்றனர்.நீங்கள் என்ன நாங்கள் வந்து ஒரு தகவல் சொன்னா கேட்கவில்லை என வேண்டும் என்றும் சொல்கின்றனர். இது எதிர்க்கட்சி சூழ்ச்சி தான், வேண்டுமென்று எனது தொகுதியில் களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
ஒருவர் போன் செய்து எங்களுக்கு பைக் வந்து பஞ்சர் ஆகிவிட்டது. பஞ்சர் கடை எங்கே இருக்கு என்று போன் செய்து கேட்டுவிட்டு நக்கலாக சிரிக்கிறாப்ள, இந்த மாதிரி தொந்தரவு செய்யும் வகையில் நிறைய போன் கால் வருகிறது.
மக்களுக்கு சேவை செய்ய விடாமல் தடுத்துகொண்டு வருகின்றனர். என்ன தடுத்தாலும் சோர்ந்து போகமாட்டோம். எங்களுக்கு எவ்வளவு தொந்தரவு கொடுக்கிறார்கள் என்று மக்களுக்கு தெரிய வேண்டும். எவ்வளவு தொந்தரவு கொடுத்தாலும் நாங்கள் மக்களுக்கு உழைப்பதற்கு எப்பொழுதும் தயாராக இருக்கிறோம்.
என்ன கஷ்டம் வந்தாலும் நான் தாங்கி கொள்வேன்.இது குறித்து நான் எந்த புகார் மனுவும் அளிக்கவில்லை. இது என்னை வளர்த்துவிடுவதற்கு ஒரு வழியாக தான் நினைக்கிறேன். இதை நான் ஒரு குறையாக நினைக்கவில்லை. இவ்வாறு அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறினார்.
இதெல்லாம் மிரட்டல் இல்லை. உன் சிந்தனையை திறமையை சோதித்து பார்க்கும் செயல்கள்.
உனக்கு எந்த வேலை கொடுக்கப்பட்டதோ அதை மட்டுமே பாருமம்மா.... எதற்கு தேவையில்லாமல் சீன் போடுகிறாய்? ஜெயலலிதாவை விடவா உங்களுக்கு எதிரிகள்? அவர் ஒரு சமயம் ஒத்தை ஆளா நின்று சட்டசபையை கலங்கடித்த வரலாறு உண்டு. அவ்வளவு ஏன் உன் தலைவன் முதல் செங்கோடன் வரை அவரை கண்டாலே பயந்து நடு நடுங்கிய காலமெல்லாம் உண்டு.
திருட்டு திராவிடம் இப்படித்தான் வாலாட்டும். காவல்துறையில் அந்த எண்களை கொடுத்து யாரென்று கண்டுபிடித்து அடிக்கிற அடியில் அவன் குடித்த தாய்ப்பாலை கக்கணும். அதை பார்த்து மற்றவனெல்லாம் பயப்படணும். அதை செய்யுங்கள் சகோதரி....
பல கஷ்டங்கலை கடந்து வந்தமைக்கு வாழ்த்துகள். வரும் தொலைபேசி எண்ணை வைத்து யார் என்று என்று கண்டுபிடித்துவிடலாம். காவல்துறை முதல்வர் கையில், நீங்கள் ஒரு அமைச்சர். உண்மை வெல்லும்.
இது போன்ற நாடக வசனங்கள் கருணாநிதி காலத்திலேயே பேசி பழுதாகிவிட்டது அமைச்சரே இப்போது நிர்வாகத்திறமையை காட்டுகிற நேரம். மற்ற வசனங்களை தள்ளி வைக்கவும் அனுதாபித்திற்கும் அபிமனந்திற்கும் அரசாங்கத்தில் இடமில்லை
ஒரு பெண் அமைச்சர் தேவையில்லாமல் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. திராவிட வளர்ப்பு அப்படிதான் இருக்கும். ஒரு மாதத்தில் ஊழல் நெட்வொர்க் முறிவு.? இனி மிரட்டுவர். அஞ்ச கூடாது. ஊழல் இல்லை என்றால் மக்கள் ஆதரவு அதிகரிக்கும். இனி தீர்வு சொல்லாமல், நடைபயணம், போராட்டம், ஊர்வலம்.. எடுபடாது. குதர்க்கமான தகவலை பதிவு செய்க. நீதிமன்றம் ஆதாரம் விரும்பும்.
பைக் பஞ்சர் .... ஒட்டு போடணும் ன்னு சொல்றது டபுள் மீனிங் ....
ஒரு பெண்ணாக மிகவும் கஷ்டப்பட்டேன் ....இதே டயலாக் ....
அமைச்சர் என்ற பின் ஆணோ, பெண்ணோ கஷ்டபட்டுதான் ஆக வேண்டும் கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லி தான் ஆக வேண்டும். முதல் தேர்தலிலே எம்எல்ஏ ஆகி அமைச்சர் ஆக ஆனதால் டபுள் பிரசர் இருக்கத்தான் செய்யும் நீங்கள் தான் சமாளிக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும் தான் அனுதாபம் வேலை செய்யும் இனி பொறுப்பு தான் உங்கள் அடையாளம். இன்னும் பார்க்க வேண்டிய விஷயங்கள் பல உள்ளது சகோதரி ஓடுங்கள் இலக்கை நோக்கி இல்லையென்றால் அடுத்த தேர்தல் மிகவும் சவாலை எதிர் கொள்ள நேரிடும்.
அனுதாபத்தை ஏற்படுத்த முயற்சியா என்ற ஒரு சந்தேகம் வருது .
இவனுங்களை கண்டு பிடித்து லாடம் கட்டித்தான் ஆகணும். இது பெரிசாகி எந்த வேலையையும் ஒழுங்காக செய்யமுடியாதபடி செய்து வேலையின் ஃப்ளோவை கெடுத்து அதையே எதிர் பிரச்சாரம் செய்ய கருவியாக்கி விடுவார்கள். அதனால் புலீஸில் புகார் குடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.மேலும்
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்