தமிழகத்தில் நாளை 14 மாவட்டம், நாளை மறுநாள் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை


சென்னை: தமிழகத்தில் இன்று (மே 17) தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

தமிழகத்தில் இன்று (மே 17) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* திருப்பூர்,

* நீலகிரி,

* கோவை,

* தேனி,

* திண்டுக்கல்

* மதுரை

நாளை (மே 18)



தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி, திருப்பூர், சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், ஈரோடு, சேலம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 14 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் (மே 19)



* தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் மே 19ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement