கஞ்சா வைத்திருந்த 17 வயது சிறுவன் கைது
பெண்ணாடம், மே 18–
பெண்ணாடத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர்.
அப்போது, கடைவீதி சாலையில் சந்தேகத்தின் பேரில் நின்ற, 17 வயது சிறுவனை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது, சிறுவனிடம், 10 கிராம் கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. போலீசார் விசாரணையில், அந்த கஞ்சா சென்னையில் இருந்து நண்பர் வாங்கி வந்து கொடுத்ததாக சிறுவன் தெரிவித்தான்.
பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து, 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, சிறுவனை கைது செய்து, கடலுாரில் உள்ள சிறுவர் கூர் நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மீனாட்சி அம்மன் அலங்காரத்தில்வெண்டாங்கி ஜோதி மாரியம்மன்
-
வீட்டில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம்; சர்ச்சையில் தவெக பெண் எம்எல்ஏ
-
செயற்கை நிறமிகளுக்கு மாற்றாக நுண்ணுயிர் நிறமிகள் உருவாக்கம்
-
முதல்வர் விஜய் போட்டோ வைக்க மறுப்பு; அடம் பிடிக்கிறார் கோவை தி.மு.க., மேயர்
-
மாநிலங்களுக்கு ரூ.90,000 கோடி கடன்: வட்டியின்றி வழங்குகிறது மத்திய அரசு
-
அம்மா உணவக மேம்பாடு: ஜெ. ஆன்மா விஜயை பாராட்டும்
Advertisement
Advertisement