மேட்டுப்பாளையத்தில் காற்றுடன் மழை

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் காற்றுடன் மழை பெய்தது.

மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர் ஆகிய பகுதிகளில், கடந்த இரு வாரங்களில் வீசிய சூறாவளி காற்றால், ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இது விவசாயிகளுக்கு பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேட்டுப்பாளையம் பகுதியில், (மே 17) மாலை, 4:30 மணியளவில், பலத்த காற்றுடன் முப்பது நிமிடம் மழை பெய்தது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ''மழை வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது. அதே நேரத்தில் பலத்த காற்று வீசுவதால், வாழை மரங்கள் முறிந்து விழுகின்றன. ஒரு சில இடங்களில் வாழை நன்றாக வளர்ந்துள்ளன. அந்த வாழைகளும், காற்றுக்கு கீழே விழுந்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது,'' என்றனர்.

Advertisement