கஞ்சா, புகையிலை விற்ற இரண்டு பேர் கைது

காஞ்சிபுரம்:கஞ்சா மற்றும் புகையிலைப் பொருட்களை விற்ற இரண்டு பேரை கைது செய்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த, ஊவேரி சத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மதிவாணன், 29. இவர், நேற்று பி.டி.லீ., செங்கல்வராய நாயக்கர் ஐ.டி.ஐ., அருகே கஞ்சா விற்பனை செய்துக் கொண்டிருப்பதாக, பாலுச்செட்டிசத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் கஞ்சா விற்பனை செய்துக் கொண்டிருந்த மதிவாணனை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 1400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, ஒலிமுகமதுபேட்டை பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த சிறுகாவேரிபாக்கம் நெட்டேரி பகுதியைச் சேர்ந்த துரை, 65, என்பவரை சிவகாஞ்சி போலீசார் கைது செய்தனர்.

Advertisement