நண்பருக்கு கத்திக்கத்து போலீஸ் விசாரணை
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மது போதையில் நண்பரை கத்தியால் குத்தியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த சென்னகுணம் கிராமத்தைச் சேர்ந்தவர் காத்தவராயன் மகன் அருண்பாண்டியன், 19; இவர், கடந்த 13ம் தேதி இரவு மதுபோதையில், அங்குள்ள மாரியம்மன் கோவில் எதிரே நின்றுகொண்டு, ஆபாசமாக பேசினார்.
இதனை அதே கிராமத்தைச் சேர்ந்த அவரது நண்பரான நாகராஜ் மகன் பாலச்சந்தர், 24; தட்டிக்கேட்டார். இதனால், ஆத்திரமடைந்த அருண்பாண்டியன் கையில் வைத்திருந்த சிறிய பேனா கத்தியால் பாலச்சந்தரை குத்தி தாக்கினார்.
புகாரின் பேரில், அருண்பாண்டியன் மீது காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு
-
அமைச்சரவையில் இடம்; விசிக, முஸ்லிம் லீக்கிற்கு தவெக அழைப்பு
-
ஈரானுக்கு எதிரான போரில் 42 விமானங்களை இழந்தது அமெரிக்கா
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு; வெள்ளி கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் சரிவு
-
ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் திட்டம் ஏதுமில்லை; சொல்கிறது நேட்டோ
-
10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது; 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
Advertisement
Advertisement