கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நிறைவு

தேனி:தேனி அருகே வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழா நிறைவடைந்தது.

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 12 முதல் மே 19 வரை நடந்தது. திருவிழாவில் பக்தர்கள் தீச்சட்டி, ஆயிரம் கண்பானை எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மே 15 ல் தேரோட்டம் துவங்கி 3 நாட்கள் நடந்தன. இதில் உள்ளூர், வெளியூர் என பல லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர். மே 19 திருவிழா நிறைவடைந்தது.

திருவிழாவை முன்னிட்டு கோயில் ரோட்டில் பக்தர்கள் வசதிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டன. திருவிழா நிறைவை யொட்டி இன்று முதல் வழக்கம் போல் வாகனங்கள் வீரபாண்டி கோயில் ரோட்டை பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன.

Advertisement