இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி * மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்...
கோலாலம்பூர்: மலேசிய பாட்மின்டன் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் ஹரிஹரன், அர்ஜுன் ஜோவி முன்னேறியது.
கோலாலம்பூரில் மலேசிய 'மாஸ்டர்ஸ் சூப்பர் 500' பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருணன், அர்ஜுன் ஜோடி, இத்தொடரின் 'நம்பர்-7' அந்தஸ்து பெற்ற பிரான்சின் கிறிஸ்டோ போபோவ், டோமா போபோவ் சகோதரர்கள் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை இந்திய ஜோடி 21-19 என கைப்பற்றியது. தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் சிறப்பாக செயல்பட 21-15 என எளிதாக வசப்படுத்தியது. 36 நிமிடம் நடந்த போட்டி முடிவில் இந்திய ஜோடி 21-19, 21-15 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தது.
அஷ்மிதா வெற்றி
பெண்கள் ஒற்றையர் தகுதிச்சுற்றில் இந்தியாவின் அஷ்மிதா, 21-23, 21-16, 21-16 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் பாய் யு போவை வீழ்த்தி, பிரதான சுற்றுக்கு முன்னேறினார்.
கலப்பு இரட்டையர் தகுதிச்சுற்றில் இந்தியாவின் சாத்வித் ரெட்டி கனபுரம், ராதிகா சர்மா ஜோடி 21-15, 21-17 என மலேசியாவின் தது ஆனிப், கிளாரிசா ஜோடியை வீழ்த்தியது.
மேலும்
-
புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு
-
அமைச்சரவையில் இடம்; விசிக, முஸ்லிம் லீக்கிற்கு தவெக அழைப்பு
-
ஈரானுக்கு எதிரான போரில் 42 விமானங்களை இழந்தது அமெரிக்கா
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு; வெள்ளி கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் சரிவு
-
ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் திட்டம் ஏதுமில்லை; சொல்கிறது நேட்டோ
-
10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது; 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி