கன்டெய்னரில் மணல் கடத்தல் மணப்பாறை லாரி ஓட்டுநர் கைது

கும்மிடிப்பூண்டி: ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு மணல் கடத்தலில் ஈடுபட்ட கன்டெய்னர் லாரி ஓட்டுநர் கைது செய்து செய்யப்பட்டார். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில், போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்த கன்டெய்னர் லாரியை பறிமுதல் செய்தனர். அதன் ஓட்டுநரான மணப்பாறை பகுதியைச் சேர்ந்த சித்திரை செல்வம், 30, என்பவரை கைது செய்தனர். கடத்தலில் தொடர்புடைய மேலும் சிலரை ஆரம்பாக்கம் போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement