வீட்டிற்கு தீ வைத்ததில் காயமான பெண் உயிரிழப்பு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பாலையம்பட்டியில் உள்ள வீட்டில் மர்ம நபர் தீ வைத்ததில் தூங்கிக் கொண்டிருந்த 2 பெண்கள் படுகாயமடைந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் சாந்தி, 40, கோபாலபுரத்தில் துப்புரவு பணியாளராக இருந்தார். 3 நாட்களுக்கு முன்பு, செவிலியராக இருக்கும் இவரது உறவினர் ஸ்ரீதேவி, 45, வீட்டிற்கு வந்துள்ளார். இரவில் துாங்கிக் கொண்டிருந்த போது, அதிகாலை 3:00 மணிக்கு மர்ம நபர் வீட்டிற்கு தீயை வைத்ததில், சாந்தி, ஸ்ரீதேவி படுகாயமடைந்தனர்.

அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் கல்குறிச்சியை சேர்ந்த முத்து 60,வை கைது செய்து விசாரித்ததில் தீ வைத்ததை ஒப்புக்கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சாந்தி உயிரிழந்தார்.

Advertisement