விளம்பர விருப்பம் கல்லுாரியில் முத்தமிழ் விழா

காரைக்குடி, மே 21-

விசாலையன்கோட்டை சேது பாஸ்கரா வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் முத்தமிழ் விழா நடந்தது.

உறியடித்தல், பொம்மலாட்டம், தேவராட்டம், சிலம்பாட்டம், கிராமிய பாடல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது. கல்லூரி முதல்வர் பேபி ராணி தலைமை ஏற்றார். தேவகோட்டை தே. பிரித்தோ மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் ஸ்டீபன் மிக்கேல் ராஜ் தமிழரின் கலாசாரம் பண்பாடு தொன்மை குறித்து பேசினார். விழாவில் சேது வள்ளியம்மாள் கல்வி அறக்கட்டளை செயலர் கோகிலம், சோகா இகேதா மகளிர் கலைக்கல்லூரி துணை முதல்வர் கண்மணி கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் கவியரசு, மீனா, செல்வன், விஷால், செல்வி, இலக்கியா மற்றும் மாணவ மாணவிகள் செய்திருந்தனர்.

Advertisement