உட்கட்சி பிரச்னை என்றாலும் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்தான்; நயினார் நாகேந்திரன்
கோவை: தேர்தல் முடிந்தவுடன் அதிமுகவில் உட்கட்சி பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதை பற்றி கருத்து சொல்ல முடியாது என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அடுத்தக்கட்டமாக எடுக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்து விவாதிக்க பாஜ மையக்குழு கூட்டம் கோவையில் கூடியது. இந்த கூட்டத்திற்கு வந்திருந்த தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது;
தேர்தலுக்கு பின்னர் மக்களை எப்படி சந்திக்க வேண்டும், அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்கிறோம். இதுபோன்ற கூட்டங்களை கோவையில் நடத்துவதற்கு என்று சிறப்பு காரணங்கள் எதுவும் கிடையாது. கடந்த முறை இதுபோன்ற கூட்டம் சென்னையில் நடந்தது.
அதிமுகவை பொறுத்தவரை, அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ்தான். தேர்தல் முடிந்த பின்னர், அவர்களுக்குள் உட்கட்சி பிரச்னை ஏற்பட்டுள்ளது. அது குறித்து இப்போது எதுவும் சொல்லமுடியாது.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
இன்றைய பாஜ மையக்குழுக் கூட்டத்திற்கு பின்னர் நாளை (மே 21) பாஜ நிர்வாகிகள் கூட்டம் நடைபெற இருக்கிறது.
மீண்டும் அண்ணாமலை பிஜேபிக்கு தலைமையை வைத்தால்தான் தமிழ்நாட்டில் பிஜேபி தப்பிக்கவும் ,நைனார் ராஜேந்திரன் பேசாமல் மீண்டும் அதிமுகவில் இணைந்து பணியாற்றவும் அண்ணாமலை மீண்டும் வரவேண்டும். மோடிஜி அமித்ஷா மீண்டும் அண்ணாமலையை பிஜேபிக்கு தலைமை ஏற்க வைக்க வேண்டும்
இவர் இன்னும் அதிமுகவில் இருந்து விலகவில்லை. பாஜக படு தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்வாரா?
அதிமுக கூட்டணியில் இணைந்து பாஜகவை அழிவு பாதைக்கு கொண்டு சென்று விட்டார். பாஜக தலைவராக இருந்து கட்சியை வளர்க்க துப்பில்லை.
இவ்வாறு பேசுவதற்கு பதில், தயவுசெய்து அதிமுகவில் இணைந்து அக்கட்சி நேரடியாகவே உழைக்கும் மாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
பிஜேபி னா அண்ணாமலை தான்
கொத்தடிமை என்று மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறாய்.
வாங்கிய பெட்டிக்கு, நன்றி விசுவாசமா இருக்குனு சொல்லுறாங்க.
இனி 234 தொகுதியில் களப் பணிக்கு முக்கியத்துவம் தர வேண்டுமேத் தவிர அடுத்தக் கட்சி விவகாரம் அவசியமே இல்லை.
இவர் இன்னும் அதிமுக வின்
உறுப்பினராக உள்ளாரோ
யாரு. இவரா?மேலும்
-
2 நாட்களில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு; வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரிப்பு
-
அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது; அமைச்சர் ஆனந்த் கண்டிப்பான உத்தரவு
-
ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத்தேர்தல்; தவெகவுக்கு ஜாக்பாட்
-
முதல்வர் விஜய் அமைச்சரவை விரிவாக்கம்; விசிக, முஸ்லிம் லீக் அமைச்சர்கள் பதவியேற்பு
-
ஹோண்டுராஸில் இரு இடங்களில் துப்பாக்கிச்சூடு; 6 போலீசார் உள்பட 25 பேர் சுட்டுக்கொலை
-
இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம்; அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் விருது வழங்கி கவுரவிப்பு