110 கிலோ குட்கா பறிமுதல் ஒரு பெண் உட்பட 4 பேர் கைது
கடலுார்: பதுக்கி வைக்கப்பட்டிருந்த 110 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், ஒரு பெண் உட்பட, 4 பேரை கைது செய்தனர்.
கடலுார், தேவனாம்பட்டினம் பகுதியில் விற்பனைக்காக குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தேவனாம்பட்டினம் சுனாமிநகரிலுள்ள ராமு மகன் கார்த்திக்ராஜன்,29; என்பவரின் வீட்டில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், 10 மூட்டைகளில் இருந்த, 110 கிலோ குட்கா பொருட்கள் சிக்கின.
அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பெட்டிக்கடை நடத்தி வரும் அருள்தாஸ்,62; அவரது மனைவி கலைவாணி,55; மற்றும் வினோத்,24; ஆகியோருக்கும் தொடர்புள்ளது தெரிந்தது.
இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 110 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
எஸ்.பி.,ஜெயக்குமார் மற்றும் டி.எஸ்.பி.,தமிழ்இனியன் பறிமுதல் செய்த குட்காவை பார்வையிட்டு, தேவனாம்பட்டினம் போலீசாரை பாராட்டினர்.
மேலும்
-
பெட்ரோல், டீசல் விற்பனையில் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கவில்லை; இந்தியன் ஆயில் நிறுவனம் .
-
கார்களின் விலையை ரூ.30 ஆயிரம் உயர்த்துகிறது மாருதி சுசூகி
-
தமிழகத்தில் தகதகக்கும் வெயில்; 16 இடங்களில் அடித்தது சதம்
-
குரு பெயர்ச்சி ஜப ஹோமம்
-
பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் பணயில் ஈடுபட்ட மின்ஊழியர்கள்
-
பொது பாதை தொடர்பாக தகராறு 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு