மகள் மாயம்; தாய் புகார்
குளித்தலை : குளித்தலை அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுமதி, 34, விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் பிரதீபா, 19, தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை, 7:30 மணிக்கு கல்லுாரிக்கு சென்றவர், வெகு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, தாய் சுமதி கொடுத்த புகாரின்படி, லாலாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement