வலி நிவாரணி மாத்திரைவைத்திருந்தவர் கைது

ஈரோடு :ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் சந்திர பிரகாஷ், 26. நேற்று முன் தினம் இவரிடம் இருந்து, 24 வலி நிவாரணி மாத்திரைகள், 5 சிரஞ்ச் ஆகியவற்றை வீரப்பன்சத்திரம் போலீசார் பறிமுதல் செய்ததுடன், அவரை கைது செய்தனர்.


வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தியதும், மற்றவர்களுக்கு விற்பனை செய்ததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

Advertisement