மூதாட்டி தற்கொலை

கடமலைக்குண்டு, மே 22-

கண்டமனூர் அருகே டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் பேச்சியம்மாள் 75, தனது மகன் முருகனுடன் வசித்து வந்தார். ஆஸ்துமா மற்றும் வாதநோய் பாதிப்பில் இருந்த பேச்சியம்மாள் 3 நாட்களுக்கு வீட்டில் யாரும் இல்லாதபோது அரளி விதையை சாப்பிட்டு வாந்தி எடுத்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதித்து நேற்று முன்தினம் இறந்தார். மகன் முருகன் புகாரில் கண்டமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement