காக்ரோச் ஜண்டா பார்ட்டி இயக்கத்திற்கு மத்திய அரசு தடை
புதுடில்லி:வேலையில்லா இளைஞர்கள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் கூறிய கருத்துக்கு எதிராக இளைஞர்களால் உருவாக்கப்பட்ட 'காக்ரோச் ஜண்டா பார்ட்டி' இயக்கத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
வேலை இல்லாத இளைஞர்கள் நாட்டின் கரப்பான் பூச்சி (காக்ரோச்) மற்றும் சமூகத்தின் ஒட்டுண்ணி என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் விமர்சித்திருந்தார். இதற்கு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த மே 16ம் தேதி அபிஜீத் டிப்கே என்பவரால் 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' என்ற நையாண்டி அரசியல் இயக்கத்தை தொடங்கப்பட்டது.
சமூக வலைதளப்பக்கத்தில் துவங்கப்பட்ட இந்த இயக்கத்திற்கு இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் பக்கத்தை பின் தொடர்வர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
இந்தநிலையில், 'காக்ரோச் ஜண்டா பார்ட்டி' இயக்கத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது. சுமார் ஒன்றரை கோடி பாலோயர்களைக் கொண்ட அந்த இயக்கத்தின் சமூக வலைதள பக்கம் முடக்கப்பட்டது. இது இளைஞர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, 'Cockroach Is Back' என்ற புதிய பக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக அதனை உருவாக்கியவர் தெரிவித்துள்ளார்.
ஒரு விஷயம் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. சொல்பவன் யார் ? எதற்காகச் சொல்கிறான் என்றெல்லாம் சிந்திக்காத பலர் இந்தியாவில் கண்மூடித் தனமாக வாழ்கின்றனர். இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தை தடுப்பதற்காக வெளிநாட்டில் இருந்து பலர் வேலை செய்து வருகின்றனர். இந்தியாவுக்கு கெட்ட பெயர் வாங்கித் தர வேண்டும் என்று பலர் இங்கும் வேலை செய்கின்றனர். சில எதிர்கட்சித் தலைவர்களின் பேச்சின் மூலம் இது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. அதனால் சிந்திக்காமல் எதையாவது செய்து விஷமிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்.
அவனை ஒரு 6 மாதத்திற்கு கும்மிருட்டறையில் அடைத்து வைத்தால் காக்ரோச் போல ஆகிவிடுவான்.
தலைமை நீதிபதி சொல்லில் தவறு இல்லை. வேலையில்லாத இளைஞர்கள் எப்படி வளர்ந்தார்கள்.? வேலை இல்லாமல் வாழ்கிறார்கள்.? எலும்பும் தோலுமாக காட்சி அளிக்கிறார்களா? பத்து பேரை அடித்து சாய்க்கும் உடல். நவீன இளைஞர்கள் பெரும்பாலோர் மயக்கத்திற்கு பெரும் தொகை செலவிடுகிறார்கள்? உழைக்காமல், மிரட்டி, ஏமாற்றி வாழ்பவர்கள் பலர். மாநில போலீசில் 10 சதவீதம் தொடர் உடல் ஆரோக்கியம் இருந்தால் அதிசயம். மாநில போலீசை நம்பி மத்திய அரசு சட்டம் ஒழுங்கு ஒப்படைக்க வேண்டாம். மாநிலங்களில் மத்திய போலீஸ் நிலையம் நிறுவ வேண்டும்.
எதற்காக தடை
இதில் எத்தனை திமுக , தவெக காங்கிரஸ் ஐயூஎம்எல் விசி கம்யூ.,வினர் இணைந்து உள்ளனர் என்று சரிபார்ப்பது காலத்தின் கட்டாயம்.
ஆம் ஆத்மி கட்சிக்காரன் அவன்....
நையாண்டி உண்மையா இருக்க வாய்ப்பு உள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதி வேலையில்லாதவர்களை பொதுவாக சொல்லவில்லை... எந்த திறனும் இல்லாமல் முறையாக படிப்பும் இல்லாமல் போலி சர்டிபிகேட் உருவாக்கி வைத்துக்கொண்டு எந்த நல்லதும் செய்யாமல் இருப்பவர்களைத்தான் அப்படி சொன்னார்
போலி சான்றிதழ் என்று மோடியை பற்றி சொல்லி இருப்பாரோ
அந்த கரப்பான் பூச்சி கட்சி இன்ஸ்டா பக்கத்தில் 49 சதவீதம் பேர் பாகிஸ்தானில் இருந்து சேர்ந்துள்ளனர்,20 சதவீதம் பேர் பங்களாதேஷில் இருந்து சேர்ந்துள்ளனர், துருக்கி அமெரிக்கவில் இருந்து சேர்ந்துள்ளனர் வரும் 2029 தேர்தலுக்கான சூழ்ச்சி பின்னப்பட்டுக்கொண்டு இருக்கிறது இதை ஏன் பாரம்பரிய நட்ட நடுநிலை என்று தங்களை சொல்லிக்கொள்ளும் ஊடகங்கள் மக்களுக்கு வெளிப்படுத்துவதில்லை?
ஒரு காலத்தில் அரசு பணி நேர்மையான நியாமாக பணி புரிந்தார்கள். ஆனால் எவ்வளவு சீக்கிரம் லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்து விடுகின்றார்கள். வேலை போனால் கூட கவலை படுவதில்லை.மேலும்
-
பெட்ரோல், டீசல் விற்பனையில் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கவில்லை; இந்தியன் ஆயில் நிறுவனம் .
-
கார்களின் விலையை ரூ.30 ஆயிரம் உயர்த்துகிறது மாருதி சுசூகி
-
தமிழகத்தில் தகதகக்கும் வெயில்; 16 இடங்களில் அடித்தது சதம்
-
குரு பெயர்ச்சி ஜப ஹோமம்
-
பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் பணயில் ஈடுபட்ட மின்ஊழியர்கள்
-
பொது பாதை தொடர்பாக தகராறு 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு