ராஜிவ் நினைவு தினம் காங்., அனுசரிப்பு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப்பில், காங்., கட்சி சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் 35வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப்பில், காங்., கோவை தெற்கு மாவட்டம், கிணத்துக்கடவு மேற்கு வட்டாரம் மற்றும் நகரம் சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ், 35வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

கிணத்துக்கடவு வட்டாரத் தலைவர் சிவராஜ், நகரத் தலைவர் செந்தில்குமார் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர். தொடர்ந்து காங்., கட்சியினர், ராஜிவ் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

Advertisement