தாய் கண்டிப்பு மகள் தற்கொலை

கம்பம், மே 22

கம்ப மெட்டு ரோடு, கம்பமெட்டு காலனியில் வசிப்பவர் லோகராஜா 42, அமுதா 38 தம்பதியர். லோகராஜா கொத்தனார் வேலை செய்கிறார். இவர்களது மகள் பிளஸ் 1 படித்தார். நேற்று முன்தினம் உறவினர் பார்த்திபன் வீட்டு காதணி விழாவிற்கு கிளம்பினர். அப்போது மகள் சுடிதாரை சரியாக அணியவில்லை என்று தாயார் கண்டித்தார். இதனால் கோபித்துக் கொண்ட மகள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கம்பம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement