10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஸ்ரீநடேசன் பள்ளி சாதனை

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தாம்பரத்தில் இயங்கும், ஸ்ரீநடேசன் பள்ளி மாணவ -– மாணவியர் சாதனை படைத்துள்ளனர்.

தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில், ஸ்ரீநடேசன் வித்தியாசாலா பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படித்து, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய மாணவ – மாணவியர், 244 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பொதுத் தேர்வில், ஆங்கிலத்தில் 6 பேர்; கணிதத்தில் 3 பேர்; அறிவியலில் 8 பேர்; சமூக அறிவியலில் 12 பேர், 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று, சாதனை படைத்துள்ளனர்.

மாணவர் மெல்கிப்சன், 496 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். மாணவியர் யுவஸ்ரீ, 493; வி.டன்ஷிகா, 488 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ – மாணவியருக்கு, பள்ளி தாளாளரும், தலைமை முதல்வருமான டாக்டர் காயத்ரி ராமச்சந்திரன், கல்வி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும், 100க்கும் மேலான மாணவ – மாணவியர், 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதித்துள்ளனர்.

Advertisement