நல்ல பழமா, சுட்ட பழமா? பழக்கடைகளில் விசாரணை

கோவை:இந்த சீசனில் அதிகம் விற்பனையாகும் மாம்பழம், தர்பூசணி, சப்போட்டா, வாழைப்பழம் ஆகியவை புகைமூட்டம் செய்தும், கெமிக்கல் சேர்த்தும் செயற்கையாக பழுக்க வைக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன.

இதை கண்காணிக்கும் வகையில், பழக்கடைகளில் தொடர்ந்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா கூறுகையில்,'' மாம்பழம், ஆப்பிள், மாதுளை உள்ளிட்ட பழங்களின் 14 மாதிரிகள் எடுத்து, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. செயற்கையாக பழுக்க வைத்திருந்தால், கடைக்கு அங்கீகாரம் ரத்து செய்து, அபராதமும் விதிக்கப்படும்'' என்றார்.

Advertisement