நகை பறிப்பு வழக்கில் கைது
இளையான்குடி;காளையார்கோவில் அருகே உள்ள கொல்லாவயலைச் சேர்ந்தவர் சுப்பிரமணி 78. இவர் உறவினர்களுடன் ஏப்.24 மாலை 4:00 மணிக்கு நாகமுகுந்தங்குடியில் உள்ள நாகநாதர் சுவாமி கோயிலுக்கு சாமி தரிசனத்திற்கு சென்றார்.
அப்போது 3 டூவீலரில் வந்த அடையாளம் தெரியாத 9 பேர் கோயிலில் இருந்த பெண்களிடம் அரிவாளை காட்டி மிரட்டி 50 பவுன் நகைகளை பறித்து தப்பினர். இவ் வழக்கில் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் கீழ்மேல்குடி அஜய் என்ற கார்த்தியை 18 கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement