திருப்பரங்குன்றம் கோவிலில் நடந்தது என்ன? ஐகோர்ட் கேள்வி
சென்னை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அமைச்சர் நிர்மல்குமார் தரிசனம் செய்வதற்காக, தாமதமாக சன்னதி நடை அடைக்கப்பட்டது தொடர்பாக, அறநிலையத் துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அமைச்சர் நிர்மல்குமார், மே 15ம் தேதி தரிசனம் செய்தார். வழக்கமாக கோவில் நடை மதியம் 12:45 மணிக்கு சாத்தப்படும். ஆனால், அமைச்சருக்காக கோவில் நடை திறந்து வைக்கப்பட்டிருந்தது. அமைச்சரின் தரிசனத்துக்கு பின், கோவில் நடை அடைக்கப்பட்டது.
அதேபோல், கருவறையில் அமைச்சர் தரிசனம் செய்த வீடியோவும், சமூக வலைதளங்களில் பரவியது.
இந்நிலையில், கோவில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை எதிர்த்த வழக்கு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'திருப்பரங்குன்றத்திற்கு அமைச்சர் நிர்மல்குமார் சென்றபோது என்ன நடந்தது என, அறநிலையத் துறை செயலர் அடுத்த வாரம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கருவறைக்குள் எவ்வாறு நுழைய அனுமதிக்கப் பட்டார்? என்ன இது முட்டாள்தனமாக இருக்கிறது.
பணத்தை கொள்ளை அடிக்கவும், அரசியல்வாதிகளின் அடிமைகளாக அரசு அதிகாரிகள் தாங்கள் பலன் பெறவும், பல ஆயிரம் ஆண்டு கோவில் நடைமுறைகள் மாற்றப்படுகிறது. அதிகம் விலை உயர்ந்த, பழமையான நகைகள் மாற்றப்பட்டு போலி நகைகள் உள்ளே கொண்டு வரப்படுகிறது. தங்கம் உருக்கப்படுகிறது. ஆயிரம் ஆண்டு பசும்பொன் சிலைகள் 25% தங்கம் இருப்பதால் உருக்கப்பட்டு பித்தளை மற்றும் தாமிரம் கொண்ட போலி சிலைகள் உருகப்படுகிறது.
பக்தர்கள் வழங்கும் நகைகள், உண்டியல் பணம் அதிகாரிகளால் பங்கு போடப்படுகிறது. டிக்கெட் பணம் கொள்ளை. இவை அனைத்தையும் பார்க்கும் போது, பெரிய கோவில்களுக்கு பணம் போடாமல் இருப்பதே நமக்கும் பாவம் வந்து சேராமல் இருக்க உதவும்.
முதலில் நீதிமன்றம் கோவில்களில் கட்டண தரிசன வரிசை ஒழிக்க சொல்லி உத்திரவிடவேண்டும் . தரிசன கட்டணம் வசூல் செய்ய தடை . சிற்றுந்து நிறுத்த கட்டணம் தடை . கோவில்கள் மனித தரிசனத்திற்குத்தான் பணம் வசூல் செய்ய இல்லை . புதிய அறநிலைத்துறை அமைச்சர் இத்தேர்க்கு ஆவன செய்யவேண்டும்
அறநிலையத்துறை இருக்கலாமாம் .... கவர்னர் பதவி கூடாதாம் ....
தாமதாக நடை மூடுவது ஒன்றும் புதிது அல்ல . மோடி ன்வந்தபோது எல்லா கோயில்களிலும் என்ன நடந்தது .. சும்மா சும்மா இந்த ஜட்ஜ் க்கு விசுவாசம் காட்ட வேண்டிய நிர்பந்தம் வேறு
சும்மா உருட்டக்கூடாது - விதிகள் அனைத்தும் மோடிஜி வந்தபோது பின்பற்றப்பட்டன
இன்று தவெக மந்திரிக்கு வேண்டி பொங்குபவர்கள் அன்று கார்த்திகை தீபத்திற்காக பொங்கவில்லையேமாமியார் உடைத்தால் மண்குடமோ?
திருப்பரங்குன்றத்தில் கோயில் சாத்தப்பட்டபின் ஒரு புதிய அமைச்சர் உள்ளே சென்று தரிசனம்
செய்தது தவறுதான் அதற்கு இவ்வளவு பில்டப் பெரிதாக விளம்பரம் கொடுக்கும் எதிர் கட்சிகள்
அங்கே கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் சொல்லியும் திராமாடலரசினால் அனுமதிக்கப்படாதது பற்றி எந்த நீதி மன்றமும் அவர்கள்மீய்து கடும் தண்டனையோ அல்லது பிறகு அவர்களே அந்த இடத்தில் தீபம் திரும்ப ஏற்றுவதுவதற்கு ஆயத்தம் எதுவுமே செய்யவில்லைய அப்படியே அந்த விஷயத்யை உயர்நீதி மன்றமன்றமும் காற்றிலே விட்டுவிட்டதை என்ன சொல்வது யாரிடம் போய் அழுவது இதுதான் நீதி மன்றத்தின் அழகா
முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில், மாண்புமிகு முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பதவி வகித்தபோது, கோவில் நடை சாத்தும் நேரம் ஆகியும், நடை சாத்தாமல் திறந்து வைத்திருக்க பட்டிருக்காது.
கோவில் நடை திறந்து வைத்தது அவ்வளவு பெரிய குற்றமா முருகா ?
வெள்ளிக்கிழமைகளில் தொழுகை நடத்தவில்லை என்றால் அது பெரிய குற்றமா "அல்லா"
ஞாயிற்றுக்கிழமையில் தேவாலயத்தில் ஆராதனை செய்ய வில்லை என்றால் பெரிய குற்றமா "யேசுவே"
இதற்காகத்தான் அறநிலையத்துறையை கோவில்களில் இருந்து வெளியேற்ற வேண்டும்மேலும்
-
அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
-
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்
-
மாநில எல்லையில் கஞ்சா விற்பனை தனிக்குழு அமைத்து தீவிர கண்காணிப்பு
-
நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்கள் கூடலுார் நகரில் மக்கள் அவதி
-
ஜெயப்பிரியா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
-
வேலை வாய்ப்பு முகாமில் 35 பேருக்கு நியமன ஆணை